விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, March 24, 2016

First Night Tips - முதலிரவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்



 first night tips counseling classes in chennai velachery, tamil nadu


முதலிரவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
தனக்குத் தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொள்ளும் இளைஞன் முதலில் அனுபவமற்ற தன் இளம் மனைவியின் நம்பிக்கையைப் பெற முயல வேண்டும். முற்றிலும் புதிய வாழ்வை மேற்கொள்ளப்போகும் அவள் மன நிலையை உணர்ந்து நடக்க வேண்டும். மெல்லப் பக்குவப்படுத்தி அவள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறியச் செய்வது அவசியமாகும். கலவி இன்பம் காண அவசரப்படுதல் கூடாது.


அணுகும் முறை:
பெண்கள் இயற்கையிலேயே மலரைப் போன்ற மென்மையான தன்மையுடையவர்கள். எனவே மலரைக் கையாளுவது போன்று மிருதுவாகக் கையாள வேண்டும். கசக்கி முகர முயற்சித்தல் கூடாது.


முதல் இரவில் பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது. தனது வீரத்தை அல்லது பலத்தைக்காட்ட அதுவல்ல நேரமும் இடமும். முதன் முறையான கலவியில் பெண்ணை பல வந்தப் படுத்தினால் அவள் கலவியையே வெறுக்கும் நிலை உருவாகக்கூடும். இந்த வெறுப்பானது ஆண்வர்க்கத்தின் மீதே ஏற்பட்டு அவள் மனதில் நிரந்தரமாகப் பதியக் கூடும். எனவே புதுப்பெண்ணின் உணர்ச்சி பாதகம் அடையாத வகையில் மென்மையாக நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். அவளுடைய நம்பிக்கையை முற்றிலும் பெறாத வரையில் கலவிக்கு முதற்படியான புறத்தொழில்களில் கூட ஈடுபடுதல் கூடாது. அப்போதுள்ள சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நடந்து கொண்டு முதலில் பூரணமாக அவளுடைய நம்பிக்கையைப் பெறுதல் வேண்டும்.

முதலாவது கட்டம்:
இளைஞன் பெண்ணைத் தழுவுதலிருந்து தொடங்க வேண்டும். இப்படித் தழுவுவதை சிறிது நேரம் மட்டுமே செய்ய வேண்டும். அதிக நேரம் தழுவிக் கொண்டே இருந்தால் அது பெண்ணிடம் வியப்பு உணர்ச்சியைக் கிளப்பி விட்டு விடும். முதன் முதலில் தழுவும் போது நெருங்கிப் பழகாத காரணத்தினால் பெண்ணின் மேல் பாகத்தை மட்டுமே தழுவ வேண்டும். அந்தச் சமயம் அவள் அதற்குச் சம்மதிப்பாள்.


பெண் சற்று வயதானவளாக அதாவது பருவமடைந்து சில ஆண்டுகள் ஆனவளாகவும் ஏற்கனவே அவனுக்கு பழக்கம் உள்ளவளாகவும் இருந்தால் வெளிச்சமுள்ள அறையில் அவளைத் தழுவலாம். ஆனால் இளம் பெண்ணாகவும் அதிக அறிமுகமில்லாதவளாகவும் இருக்கும் பட்சத்தில் இருட்டிலேயே தழுவுதல் நல்லது. அதுதான் அவளுடைய வெட்கத்தைக் குறைத்து அவளையும் விருப்பத்தோடு ஈடுபடச் செய்யும்.

இரண்டாவது கட்டம்:
ஆணினுடைய ஆலிங்கனத்தை பெண் ஏற்றுக்கொண்டதும், தாம்பூலத்தை (ஏதேனும் இனிப்பை) அவள் வாயில் ஊட்ட வேண்டும். அப்படிக்கொடுக்கும் போது மெல்ல அவளுடைய இதழ்களில் பரிவுடன் ஓசையின்றி முத்தமிட வேண்டும்.

மூன்றாவது கட்டம்:
இந்த இரண்டும் செய்த பிறகு அவளைப் பேசத் தூண்ட வேண்டும். அவளிடம் எதைப்பற்றியாவது உற்சாகமான கேள்வி கேட்பது இதற்கு ஏற்ற முறையாகும்.

என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?’’ என்பது போன்ற கேள்விகளைக் கேட்கலாம். இப்படிக் கேட்பதற்கு முதலில் பதில் சொல்ல மாட்டாள். அதிகமாக வற்புறுத்தினால் தலையை மட்டும் ஆட்டுவாள். தன் வாயைக் கிளறுவதற்காகவே இப்படிக் கேட்பதாக அவள் எண்ணும்படி அமைந்து விடக் கூடாது உங்கள் கேள்விகள். அப்படியான எண்ணம் அவளுக்கு உண்டாகும் பட்சத்தில் அவளிடமிருந்து திருப்திகரமான பதிலும் உடன்பாடும் கிடைக்காமல் போகக்கூடும்.

நான்காவது கட்டம்:
வெட்கத்தைவிட்டு சரளமாகப் பேசத் தொடங்கியதும் அவள் தாம்பூலத்தை எடுத்து எதுவும் பேசாமல் அவனுக்குக் கொடுப்பாள். அப்போது தனது இளம் மார்பகத்தை அவன் லேசாக வருட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு சமிக்ஞை இது. அவன் உடனே மெல்ல விரல்களால் அவள் மார்பகத்தைப் பிடித்து தடவ வேண்டும். அப்படிச் செய்ய வேண்டாம் என்று அவள் வாய்விட்டுச் சொன்னாலோ, அல்லது பேசாமல் கையினால் தடுத்தாலோ தன்னை அவள் அணைத்துக் கொண்டால் மீண்டும் அவ்வாறு செய்வதில்லை என்று கூறலாம். இந்த விதமாக அவளாகத் தன்னை அணைத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.


அப்படி அவள் அவனை அணைத்துக் கொள்ளும்போது அவளது உடலை மிருதுவாகத் தடவிக் கொடுக்க வேண்டும். அவள் அணைக்கும் போது அவளது மார்பகங்கள் ஆணின் மார்பின் மீது படிந்திருக்கும். அப்படியே மெல்ல அவளைத்தூக்கி தன் மடியில் இருத்திக் கொண்டு தனங்களை வருட வேண்டும். அவ்வப்போது முத்தங்களும் கொடுத்தல் வேண்டும்.




==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்